திருவண்ணாமலையில் கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம்புத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

மங்கலம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வித்துறை சார்பில் 6- ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், அவர்களுக்கு மன தைரியம் அளிக்கும் வகையிலும் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாணவிகள் ஆர்வத்துடன் கற்று பயனடைந்து வருகின்றனர்.

Exit mobile version