சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு – கராத்தே தியாகராஜன் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக என்ற கட்சியை சரியாக வழிநடத்த முடியாத ஸ்டாலின், தமிழகத்தை எப்படி வழிநடத்த முடியும் என கேள்வி எழுப்பினார். அதிமுகவில், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எடப்பாடி பழனிசாமியை, தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சரானால், தமிழகம் மேலும் செழிப்படையும் என்பதால், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தனது ஆதரவை அளிப்பதாகவும் கராத்தே தியாகராஜன் குறிப்பிட்டார்.

Exit mobile version