காப்பான் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

காப்பான் படத்தின் கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் தன்னுடைய சரவெடி என்ற கதையை இயக்குனர் கே.வி.ஆனந்த் திருடி, காப்பான் என்ற பெயரில் படமாக்கியதாகவும், அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version