கன்னியாகுமரியில் அதிக அளவில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், எவ்வித அசம்பாவிதமும் நேராத வண்ணம், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version