போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து சிக்கும் கன்னட திரைபிரபலங்கள்!

போதைப் பொருள் வழக்கில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பெங்களூருவில் நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். காலை 6 மணி முதல் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் வழக்கில் சஞ்சனா கல்ராணிக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version