கனிமொழியின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பு

தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனு மீதான பரிசீலனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், கனிமொழியின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவரது வேட்புமனுவில் பான் கார்டு எண் தவறாக பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவரது கணவர் அரவிந்தனின் சிங்கப்பூர் வங்கி கணக்கின் விவரங்களும் அவரது வேட்புமனுத் தாக்கலில் முழுமையாக இல்லை என்பதால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version