பச்சை பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்

13ஆம் நாளான இன்று பச்சை பட்டு உடுத்தி அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பச்சை பட்டாடை உடுத்தி திருமேனி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சயன கோலத்தில் பக்தர்களுக்கு அத்தி வரதர் அருள் பாலித்தார். காலை ஐந்து மணி முதல் வசந்த மண்டபத்தில் உள்ள அத்தி வரதர் தரிசனத்திற்காக காத்திருந்த பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசம் செய்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அத்தி வரதரை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோரும் தரிசனம் செய்தனர். இதேபோல் நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தரிசனம் செய்தனர்.

Exit mobile version