அத்திவரதர் உற்சவம் ஐந்தாம் நாள் : காவி நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி

அத்திவரதர் உற்சவம் தொடங்கி ஐந்தாம் நாளான இன்று, காவி நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அவர் காட்சி அளித்தார். காஞ்சிபுரம், அத்திவரதர் கோவிலில் உற்சவம் தொடங்கி ஐந்தாம் நாளான இன்று காலை ஐந்தரை மணியளவில் காவி நிறத்திலான பட்டு அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு காட்சியளித்தார். மேலும் வண்ண மலர்களால் அத்தி வரதர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 4 நாட்களாக 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாகவும். நேற்று மட்டும் 45 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. ஒவ்வொரு நாளும் அத்திவரதர் வெவ்வேறு வண்ணங்களில் பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். ஆயிரக் கணக்கான பக்தர்கள் அவரை சேவித்து வருகின்றனர்.

Exit mobile version