காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரத்தின் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழையும், செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆயினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Exit mobile version