காஞ்சிபுரத்தில், பழமையான மரம் அகற்றி வேறு இடத்தில் நடப்பட்டது

சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்படும் மரங்கள் வேறு இடங்களில் நடப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாலாஜாபாத் பகுதியிலிருந்து திருவள்ளூர் கீழச்சேரி, மப்பேடு பகுதிவரை போக்குவரத்து நெரிசலை தடுக்க 4 வழிச்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலை ஓரங்களில் இடையூறாக இருந்த 150 க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு, கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு சுங்குவார்சத்திரம் பகுதியில் நடும் பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version