20 தொகுதிகளில் இடைத்தேர்தலைச் சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார். நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.