இந்து தீவிரவாதம் பற்றி பேச கமல் பக்குவமடையவில்லை: தமிழிசை

அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறப் போகிறது என்பதால் ஏனைய கட்சிகள் பயத்தில் உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெறப் போகிறது என்பதைக் கண்டு மு.க.ஸ்டாலின், அழகிரி, கமல் உள்ளிட்ட அனைவரும் பயந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இந்து தீவிரவாதம் பற்றி பேசி அரசியல் நடத்தும் அளவுக்கு கமல் இன்னும் பக்குவமடையவில்லை என்றும் தமிழிசை விமர்சித்தார்

Exit mobile version