கட்சி நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்திக்காமல், தனது உதவியாளரை வைத்து விரட்டி அடித்த சம்பவம் பழனியில் நடந்துள்ளது.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். கமலை சந்திப்பதற்காக வந்த நிர்வாகிகளை அவரது உதவியாளரை வைத்து விரட்டியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பக்தர்கள் செல்லும் வழியில் வாகனங்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி கமல்ஹாசன் வேனில் சென்றார். இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Exit mobile version