கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டுத் திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில், கள்ளர்வெட்டுத் திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கள்ளர்வெட்டு திருவிழா கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர்வெட்டு திருவிழா நேற்று நடைபெற்றது. கோயில் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

 

Exit mobile version