களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் செல்ல தடை

வன உயிரினங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முண்டன்துறை புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

புலிகளின் இனப்பெருக்க காலமாக இருப்பதால், நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, காரையார் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. புலிகள் காப்பக பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, சொரிமுத்து ஐய்யனார் கோவிலுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பலகாரங்கள், மர இலைகளில் வைத்து பரிமாறப்படுகிறது.

Exit mobile version