தீர்ப்பால் நிலைகுலைந்து போய் உள்ளது டிடிவி தரப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுக-வில் ஸ்லீப்பர் செல் என்ற ஒன்று கிடையாது என செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் நன்கொடையாக கட்டி கொடுக்கப்பட்ட சுற்றுசுவரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் ஸ்லீப்பர் செல் என்று ஒன்று கிடையாது என்றார். நீதிமன்ற தீர்ப்பால் டிடிவி தினகரன் தரப்பு நிலைகுலைந்து போய், இருப்பவர்களை தக்கவைக்க ஏதாவது சொல்லிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். தினகரனை எம்.எல்.ஏக்கள் யாராவது ஆதரித்தால், அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version