ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் அலோசனை- கடம்பூர் ராஜூ

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்கள் மீட்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நவீன கருவிகள் வாங்குவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் மற்றும் பயணியர் விடுதி முன்பு உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, குடிமராமத்து திட்டத்தின் மூலம் கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருவதாக கூறினார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version