கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில், 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம், இன்று விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை 8.45 மணிக்கு, கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Exit mobile version