கன்னியாகுமரி அருகே மாநில அளவிலான கபடி போட்டி

கன்னியாகுமரி அருகே, கோயில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கிய அன்னை குருசடி திருவிழாவை முன்னிட்டு, 46வது மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. 2 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையை ஆளத்தங்கரை அணியினர் தட்டிச்சென்றனர். இரண்டாம் பரிசு மற்றும் அதற்கான கோப்பையை திருநைனார் குறிச்சி அணியினர் வென்றனர். இந்த கபடி போட்டியை பெருந்திரளான விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் கண்டுகளித்தனர்.

Exit mobile version