ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூலம் நோய் பரவுவதாகவும், சுற்றுச்சூழல் மாசடைவதாகவும் தெரிவித்து, ஆலையை மூடக்கோரி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவின் படி, கடந்த ஆண்டு மே மாதம் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டதை அடுத்து ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து, வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என தெரிவித்தது. இதனைத் தெடர்ந்து வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Exit mobile version