இடஒதுக்கீடு வழக்கில் ஜூலை 27ல் தீர்ப்பு!!!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில், வரும் 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் வழக்கு தொடர்ந்திருந்தன.

வழக்கின் இன்றைய விசாரணையின்போது, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும்போது, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது சட்டவிரோதமானது என தமிழக அரசு வாதிட்டது.

அத்துடன், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகளவில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும், சாதி வாரியான மக்கள் தொகை வாயிலாக இடஒதுக்கீட்டை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, மருத்துவ மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு முறை கூடாது என மருத்துவ கவுன்சிலில் விதி இருப்பதாக கூறியது.

மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் இருக்கும்பட்சத்தில் தமிழகத்திற்கு இடங்கள் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஜூலை 27ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Exit mobile version