நீதிபதிகள் பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் – உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி

சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும் தீர்ப்பு வழங்குவதை நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

சிவில் நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை, சமூக நீதி வழங்கப்படுவதை நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

நீதிபதி வழங்கும் தீர்ப்பே அவரின் உண்மையான தகுதி என்ன என்பதை வெளிப்படுத்தும் எனக் கூறிய அவர், மனசாட்சியோடு ஒரு வழக்கில் சாதக பாதங்களை சட்டத்தின் பார்வையில் ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version