மாறன் சகோதரர்கள் வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், சி.பி. ஐ நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா மறுத்து விட்டார். சட்ட விரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், சி.பி.ஐ நீதிமன்றம் இரண்டாவது முறை மேற்கொண்ட குற்றச்சாட்டு பதிவையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை எனவும் குற்றச்சாட்டு பதிவுக்கு முன்னர் ஏற்கனவே இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரித்தாரோ, அந்த நீதிபதியிடம் முறையீடு செய்யுங்கள் என கூறி வழக்கை ஏற்க மறுத்து விட்டார்.

Exit mobile version