ஜோய் ஆலுக்காஸின் புதிய கிளையை திறந்துவைத்தார் விஜய்சேதுபதி

கோவை நூறடி சாலையில் ஜோய் ஆலுக்காஸின் 26வது கிளையை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்தார்.

கோவை நூறடி சாலையில் ஜோய் ஆலுக்காசின் புதிய நவீன தங்க நகை ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நகைக்கடை துவக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார்.

ஜோய் ஆலுக்காசின் புதிய ஷோரூமை துவக்கி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். அவரை காண அதிகளவிலான ரசிகர்கள் கடையின் முன்பு குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த மாதத்தில் தனது புதிய திரைப்படம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார். அனைத்துவிதமான படங்களிலும் பாகுபாடின்றி தான் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். ஜோய் ஆலுக்காசின் 25வது கிளையை நேற்று மதுரையில் துவக்கி வைத்த அவர், 26வது கிளையை கோவையில் இன்று துவக்கி வைத்துள்ளார்.

Exit mobile version