வருகிறாரா ஜாண்டி? … உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்…

உலக கிரிக்கெட்டில் தலை சிறந்த பீல்டர் என்றால் அது ‘ஜாண்டி ரோட்ஸ்’ தான். தென்னாப்ரிக்காவை சேர்ந்த அவரது பீல்டிங்-கிற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் உண்டு. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், கவுண்டி மற்றும் சர்வதேச அணிகளுக்கு பீல்டிங் ஆலோசகராக வலம் வந்தார். தற்போது இந்திய அணியின் பீல்டிங் கோச் பதவிக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் ஆலோசகராகவும் அவர் இருந்துள்ளார். இந்திய நாடு தனக்கு மிகவும் நெருக்கமானது என்று கூறியுள்ள ஜாண்டி ரோட்ஸ், மிகவும் பிசியாக இருக்கும் இந்திய அணிக்கு தான் பீல்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டால் மிகவும் சந்தோஷப் படுவேன் என்று கூறியுள்ளார்.

இந்திய ரசிகர்களும் ‘ஜாண்டி ரோட்ஸ்’ பீல்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டால் அணியின் செயல்திறன் அதிகரிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஜாண்டி ரோட்ஸ் இந்தியாவில் பிறந்த தனது மகளுக்கு இந்திய நாட்டின் மீதான தன் அன்பை வெளிப்படுத்து விதமாக “இந்தியா” எனப் பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version