நாளை நடைபெறுகிறது ஜிப்மர் எம்.பி.பி.எஸ் நுழைவுத்தேர்வு

ஜிப்மர் எம்.பி.பி.எஸ் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை 132 நகரங்களில் நடைபெற உள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 2019 ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் நுழைவு தேர்வு, நாளை காலை, மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெறவுள்ளது. 200 இடங்களுக்கான நுழைவுத்தேர்வை 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 முப்பது மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்கவுள்ளது. தேர்வு மையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வர மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25 மாநிலங்களில் 132 நகரங்களில் உள்ள 280 மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 21ம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளன.

Exit mobile version