ஜிசாட்-30ஐ இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

2020-ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30ஐ இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-30 செயற்கைக்கோளை இன்று அதிகாலை 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான் ராக்கெட் 5 மூலம், ஜிசாட்-30 விண்ணில் செலுத்தப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த, இன்சாட்-4 ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட்30 செயற்கைக்கோளானது Ku-band-ல் இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பையும், C-band-ல் வளைகுடா நாடுகள், ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கி, விரிவாக்கப்பட்ட பாதுகாப்பை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Exit mobile version