ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஐந்து கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இறுதிகட்டமாக இன்று 16 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. 5 தொகுதிகளுக்கு பிற்பகல் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மீதமுள்ள 11 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Exit mobile version