நகை கடையில் ஐ.டி சோதனை!

சென்னையில் தனியார் நகைக்கடை நிறுவனத்தில் கணக்கில் வராத ஒன்றரை கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். இது குறித்து விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை யானைக்கவுனி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தனியார் நகை கடையில், நேற்று நள்ளிரவில் சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version