நகை அடகுக் கடையில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை முயற்சி

திருப்போரூர் அருகே உள்ள நகை அடகுக்கடையில் இளைஞர்கள் 3 பேர் துப்பாக்கியுடன் நுழைந்த போது, உடனடியாக கடை உரிமையாளர் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்ததும் அங்கிருந்து தப்பியோடினர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் விமல் சந்த் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது கடையில் நுழைந்த முகமூடி அணிந்த 3 இளைஞர்கள் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர்.

அப்போது கடை உரிமையாளர் விமல், எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்ததால்
கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். கொள்ளைச் சம்பவம் குறித்து கடை உரிமையாளர் காவல்துறையினரிடம் புகாரளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பியோடியக் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version