வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பயணிகளிடம் நகைகள் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆயிரத்து 635 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த போஸ் பீர் என்பவர் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுத்தியல் வடிவில் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 658 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த மாதவன் என்ற பயணியிடம் இருந்து 206 கிராம் தங்கமும், இலங்கையில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துகுமார், புதுக்கோட்டையை சிகந்தர் பாஷா, குமரகுரு ஆகியோரிடம் இருந்து 644 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகைதீன் என்ற பயணியிடம் இருந்தும் 127 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version