சென்னையில் தோஷம் கழிப்பதாக கூறி நகை மற்றும் பணம் கொள்ளை

சென்னை நீலாங்கரை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு வங்கி அதிகாரியான சந்திரபால் பாண்டியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை கோளாறால் உயிரிழந்தார். பின்னர் மகனின் உயிரிழிப்பு குறித்து தெரிந்து கொள்ள, குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்று குறி கேட்டுள்ளனர்.

இதை அறிந்து கொண்ட போலி சாமியார் குழுவினர் 5 பேர், கடந்த மாதம் 21ம் தேதி சந்திரபால் பாண்டியனிடம் சென்று, பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரபால் பாண்டியன், பூஜைக்கு ஒப்புக்கொண்டார். பூஜையை முடித்த போலி சாமியார்கள், 4 சவரன் நகை மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பூஜையின் போது நகைகள் மாயமானதை அறிந்த சந்திரபால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜோசஃப் என்பவரை கைது செய்தனர். ஜோசஃப் கைது செய்யப்பட்டதை அறிந்து கொண்ட உதயகுமார் என்பவர் காரில் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அவரை விரட்டி பிடித்த காவல்துறையினர், நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version