ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் நகையை திருடிய இளைஞர்

மதுரையில் ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் நகையை திருடிய இளைஞரை பிடித்த காவல்துறையினர், அவனிடமிருந்து 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.

மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுசிலா இவர் சுகாதார பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவர் சென்னையிலிருந்து மதுரைக்கு பாண்டியன் அதிவிரைவு வண்டியில் வந்துள்ளார். அப்போது கழிவறைக்கு சென்ற நேரம் பார்த்து, அவர் பையில் வைத்திருந்த சுமார் 7 சவரன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் திருடியுள்ளார். ரயிலில் இருந்து இறங்கும் போது தன் பையில் இருந்த நகைகளை காணாமல் போனதை கண்ட முதியவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். துரிதாமாக செயல்பட்ட காவல்துறையினர் ரயில் நிலையத்தில் இருந்தவர்களை சோதனையிட்டனர். அப்போது ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரிய வந்தது. இளைஞரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version