பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்க உள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான உரிமையை ஜெகன்மோகன் ரெட்டி கோரினார். இந்தநிலையில் இன்று காலை டெல்லி செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, ஆந்திராவின் நீண்டகால கோரிக்கையான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

Exit mobile version