அரசை குறை கூறுவதை விட்டு களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் – ஸ்டாலின், கமலுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அறிவுரை 

கஜா புயல் பாதிப்புகளை சரி செய்ய அனைத்து கட்சியினரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனி மனிதர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் கரியாப்பட்டின கிராம மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ஸ்டாலின், கமல்ஹாசன் போன்றோர், அரசை குறை கூறுவதை விட்டு விட்டு, களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றார்.

 

 

 

 

Exit mobile version