ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்கள் சென்று சேராத வீடுகளே இல்லை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்கள் சென்று சேராத வீடுகளே இல்லை என சவால் விட்டு கூறியுள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திமுக ஆட்சியின் போது என்ன மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என பதிலளிக்க தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அனைவரது மனதிலும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version