கோபிசெட்டிபாளையத்தில் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கம் சார்பில்  ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர், போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கினாலும் தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது பெருமிதம் தெரிவித்தார். 

Exit mobile version