நாட்டிலேயே ஜெயலலிதா பெயரில் தான் 30 நலத்திட்டங்கள் உள்ளன: அமைச்சர் பாண்டியராஜன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் இலவச சேலை, மூன்று சக்கர வாகனம், கல்வி ஊக்கத்தொகை, இஸ்திரி பெட்டி உள்ளிட்டவைகளை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், நாட்டிலேயே ஒரு தலைவரின் பெயரில் 30 நலத்திட்டங்கள் உள்ளதென்றால் அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் மட்டும் தான் எனக் கூறினார்.  

Exit mobile version