பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள், நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சொந்த ஊரான ஜீமங்கலம் கிராமத்தில், பாரம்பரிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

வண்ணம் பூசி மிடுக்குடன் மேடையில் தோன்றிய நாடக கலைஞர்களின் நாடகம் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ஏராளமான மக்கள் இரவு முழுவதும் கண்டு களித்தனர்.

Exit mobile version