விடுதி கட்டணம் உயர்வு: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

டெல்லியில் விடுதி கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர்.

விடுதியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்று திரண்டு கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதி கட்டணத்தை திரும்ப பெறக்கோரி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி நிர்வாகமும், காவல்துறையினரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களை கலைக்க காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதில், ஆங்காங்க ஓடிய மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனியடையே மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version