பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஜதி பள்ளக்கு ஊர்வலம் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜதி பள்ளக்கு ஊர்வலத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மயிலாப்பூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் மற்றும் பாஜக எம்.பி.இலகணேசன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து நடைபெற்ற ஜதிபள்ளக்கு ஊர்வலத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஜதிபள்ளக்கை துணை முதல்வரும், அமைச்சரும் பாரதியார் இல்லம் வரை சுமந்துசென்றனர். பாரதியாரின் பெருமைகளை போற்றும் விதமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவில் பேசினார்.

Exit mobile version