பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ம் தேதி விடுமுறை – தமிழக அரசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ம் தேதியன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த வருடம் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, குடும்பத்துடன், தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக 14-ம் தேதி அன்று விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி-கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அளித்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் வரும் பிப்ரவரி 9-ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Exit mobile version