ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு இன்று மாலை அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புத்காமில் உள்ள ராணுவ முகாமில் இவர்களது உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ராணுவம் சார்பில் இவர்களது உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, வீரர்களின் சொந்த ஊர்களுக்கு இன்று மாலையே விமானம்மூலம் உடல்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Exit mobile version