ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான விசாரணை 6 மாதத்தில் நிறைவடையும்- விசாரணை ஆணையம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணை 6 மாதத்தில் நிறைவடையும் என விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்த 13-வது கட்ட விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தொடங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து விசாரணை நடைபெறும் என தெரிவித்தார். இந்த விசாரணை இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் என்றும், அதன் பின்னர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.

Exit mobile version