நாமக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

நாமக்கல்லில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 200 மாடுபிடிவீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த கரிய பெருமாள்புதூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, சேந்தமங்கலம், முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி, சேலம், துறையூர், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை 200க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் கலந்துகொண்டு உற்சாகமாக அடக்கினர்.

Exit mobile version