நாமக்கல்லில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே, ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. சேந்தமங்கலம் அருகே கரியபெருமாள்புதூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, சேந்தமங்கலம், முள்ளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர்.

Exit mobile version