ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி

சேலம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சேலம், நாமக்கல், திருச்சி, துறையூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டைக் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Exit mobile version