அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தை மாதம் முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, தைத் திருநாளின் முதல் நாளான இன்று, மதுரை அவனியாபுரத்தில்  ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இப்போட்டியானது மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதனிடையே இப்போட்டியில் 591 காளைகள் பங்கேற்கின்றன. 691 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜல்லிக்கட்டில் மாடுகள் காயமடைந்தால் சிகிச்சையளிக்க தயார் நிலையில் 7 மருத்துவ குழுக்களும், மாடு பிடி வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சையளிக்க தயார் நிலையில் 10 மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர்.

Exit mobile version