ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார்படுத்தும் கிராமத்தினர்

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக உசிலம்பட்டி அருகேயுள்ள பன்னைப்பட்டி கிராமத்தினர் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

தை பொங்கல் வருவதையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னைப்பட்டி கிராமமே ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார்படுத்தி வருகின்றன. கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தங்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். காளை மாடு ஒன்றுக்கு தினசரி 15 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கும் கிராமத்தினர், வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அவிழ்த்துவிடப்படும் காளைகளை இளைஞர்கள் தீரத்துடன் அடக்கி பயிற்சி பெறுகின்றனர்.

Exit mobile version