அவனியாபுரத்தில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி

அவனியாபுரத்தில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை மறு நாள் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டை எவ்வித பிரச்சினையுமின்றி நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவினர் ஜல்லிக்கட்டு நடைபெறுமிடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ராகவன், ஜல்லிக்கட்டை நடத்த அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த நன்கொடை வழங்குபவர்கள் தனி நபர்களிடம் பணமோ, பரிசு பொருளோ கொடுக்க வேண்டாம் என கூறிய அவர், இந்த ஜல்லிக்கட்டில் அனைத்து மனிதர்களும் சமமாக மதிக்கப்படுவார்கள் என்று திட்ட வட்டமாக கூறினார்.

Exit mobile version